கொல்கத்தா ரயில்வே அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு!

கொல்கத்தாவில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொல்கத்தா நகரின் ஸ்டிராண்ட் சாலையில், 13 மாடிகள் கொண்ட ரயில்வே மண்டல அலுவலகத்தில் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த 8 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென கட்டடம் முழுவதும் பரவியது. இந்த தீ விபத்தில் 2 ரயில்வே அதிகாரிகள், ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட இடத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மீட்பு பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், 9 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

 

Exit mobile version