உதகையில் மார்க்கெட் கடைகள் 2 நாட்களுக்குள் திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உதகை நகராட்சி சந்தைக் கடைகளை 2 தினங்களுக்குள் திறக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 2 நாட்களுக்கு முன் வாடகை செலுத்தாத மார்க்கெட் கடைகளுக்கு நகராட்சி ஆணையர் சீல் வைத்தார்.

அதை எதிர்த்து மார்க்கெட் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் புதிய வாடகை முறையை கட்டத் தயாராக உள்ளதாகவும், தமிழக அரசு அதற்கு தவணை முறையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இரண்டு நாட்களுக்குள் கடையை திறப்பதற்கான உத்தரவு பிறப்பிக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version