"தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?"

தமிழ்நாட்டில் மேலும் 97 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், உள்ளூரை சேர்ந்த மக்கள் என 97 பேருக்கு ஒமிக்ரான் தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அவர்களின் மாதிரிகளில் பகுப்பாய்வு பரிசோதனைக்காக புனே ஆராய்ச்சி நிறுவத்திற்கு அனுப்பட்டுள்ள நிலையில், முடிவிற்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து வருகிற 31ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version