14 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை நிறைவு

தமிழகம் முழுவதிலும் 14 இடங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நிறைவு பெற்றது.

மதுரை, தேனி, ராமநாதபுரம், வாலிநோக்கம், தஞ்சாவூர், பெரம்பலூர், கீழக்கரை, நெல்லை உள்ளிட்ட 14 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காலை 6 மணி முதல் நடத்திய சோதனை முடிவடைந்தது. இதில் ஒரு லேப்டாப், 7 மொபைல் போன்கள், 5 சிம்கார்டுகள், 3 மெமரி கார்டு, 2 பென்டிரைவ், 1 ஹார்ட்டிஸ்க், 9 சிடி மற்றும் டிவிடிக்களும், 50ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

சென்னை கொத்தவால் சாவடியில் தேதிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனை முடிவடைந்தது. கொத்தவால் சாவடி டேவிட்சன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தவ்ஹீத்தின் இல்லத்தில் தேதிய புலனாய்வு முகமை அதிகாரிகளால், சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் 3 செல்போன்கள் மற்றும் மூன்று சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version