3.5 % இடஒதுக்கீட்டை 5 % உயர்த்த கோரி மனு-சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடிவு

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.

மதுரையை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் 3.5% இட ஒதுக்கீட்டினை 1.5% அதிகரித்து 5%-மாக வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இதுகுறித்து நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

செய்தியை காட்சிபதிவுடன் காண

⬇⬇⬇⬇⬇

இதுபோன்ற மேலும் பல தகவல்கள் அடங்கிய மாவட்ட்ட செய்திகள் உள்ளே

பல்வேறு மாவட்ட 

Exit mobile version