சீர்காழி இசைப்பள்ளியில் சேர மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு இசைப்பள்ளியில் மூன்று வருட முழுநேர படிப்பில் சேர மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் இந்த இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகியவை மிகச் சிறப்பாக மூன்று வருட முழுநேர பயிற்சி அளிக்கப்பட்டு தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கைக்கு 18முதல் 25வயது வரையுள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Exit mobile version