வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா? திமுக-மணல்கொள்ளை-யை தடுத்து நிறுத்தியவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்…

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகே மணல் கடத்தலை தடுத்து நிறுத்திய அதிமுக பிரமுகர் மற்றும் அவரது நண்பர் மீது திமுக குண்டர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கரியப்பட்டிசேரியில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன், ஆட்களை வைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சவுந்தரபாண்டியன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

அதைத்தொடர்ந்து திமுக பிரமுகரின் மணல் திருட்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த, திமுக ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் மற்றும் அவரது சகோதரர் கண்ணன் ஆகியோர் ஏவுதலின் பேரில், குண்டர்கள் அதிமுக பிரமுகரின் வீடு, புதிய கடையை அடித்து நொறுக்கினர்.

அதிமுக பிரமுகர் சவுந்தரபாண்டியன் மற்றும் அவரது நண்பரான நடராஜனையும் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க பந்தநல்லூர் காவல்நிலையத்தில் சுணக்கம் காட்டுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தரும் பேட்டிகளை பார்க்க

⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇

Exit mobile version