நியூஸ் ஜெ செய்தி எதிரொலி: ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்தனர்

நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்து வருகின்றனர். காரியாபட்டி அருகே உள்ள பி.புதுப்பட்டியில் சுமார் 300 குரங்குகளுக்கு மேல் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் ஒவ்வொரு நாளும் வீடுகளைப் பூட்டிக் கொண்டு வசிக்கும் நிலை இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். குரங்குகளின் நடமாட்டம் பற்றிய செய்தி அண்மையில் நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது.

இந்த செய்தியின் தாக்கத்தால் தற்போது குரங்குகளை பிடித்து வனத்திற்குள் கொண்டு விடும் நடவடிக்கையில் வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். பி.புதுப்பட்டி கிராமத்திற்குள் கூண்டுகள் வைத்து குரங்குகளை பிடித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மூலம் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பி. புதுப்பட்டி கிராம மக்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version