நியூஸ் ஜெ செய்தி எதிரொலி : வீட்டை விட்டு வெளியேற்றிய தந்தைக்கு உதவிக் கரம் நீட்டிய வட்டாட்சியர்!!

நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக, ஒசூரில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஊனமுற்ற சர்க்கரை நோயாளிக்கு, வட்டாட்சியர் உதவிக் கரம் நீட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், கிருஷ்ணசாமி என்பவர், மகள் ஜெயலட்சுமி வீட்டில் வசித்து வந்துள்ளார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, வலது கால் நீக்கப்பட்ட பின்பும், இடது காலிலும் சர்க்கரை நோய் தீவிரமாகி உள்ளது. இந்நிலையில், முதியோர் ஊக்கத் தொகையை மகள் ஜெயலட்சுமி மாதம் தோறும் வசூல் செய்து கொண்டு, முதியவரை கொடுமைப்படுத்தி, வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆதரவின்றி தவித்த கிருஷ்ணசாமிக்கு உதவுமாறு, நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனை அறிந்த வட்டாட்சியர் செந்தில்குமார், கிருஷ்ணசாமியை மீட்டு, புத்தாடைகள் மற்றும் பழங்களை வழங்கியதுடன், முதியோர் இல்லத்தில் சேர்ப்பதாக உறுதியளித்தார். மருத்துவ சிகிச்சைக்காக கிருஷ்ணசாமியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Exit mobile version