16 வயதில் இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தை விற்பனை?

16 வயதில் திருமணமான இளம் பெண்ணுக்கு பிறந்த 6 நாளே ஆன குழந்தையை ராஜஸ்தானை சேர்ந்த தம்பதியினர் விலைக்கு வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து காவல்துறைய்னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 16 வயது இளம்பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் தாயும் தந்தையும் குடும்ப தகராறு காரணமாக பிரிந்ததால் குழந்தையின் தாயின் நலன் கருதி குழந்தையை விற்க முடிவெடுத்ததாக தெரிகிறது. தனியார் மருத்துவமனையில் ஓட்டுநராக பணிபுரியும் இமானுவேல் என்பவர் மூலம் ராஜஸ்தானை சேர்ந்த பாதர் வல்ராம், கிறிஸ்டி தம்பதியினர் குழந்தையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தைக்கு மஞ்சள்காமாலை இருப்பது போல தெரிய வந்துள்ள நிலையில், கிறிஸ்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். ஆனால், குழந்தைக்கும், ராஜஸ்தானைச் சேர்ந்த தம்பதிக்கும், சம்பந்தமில்லாது இருப்பது போல் அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் சுகாதாரதுறை துணை இயக்குநரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து, சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைக்கு தென்காசி அரசு மரு த்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version