ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணீ தேவாலயம்,திருத்தனி முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நாகை வேளாங்கண்ணி தேவாலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நடைபெற்ற சிறப்பு கூட்டு திருப்பலியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 2018ம் ஆண்டிற்கு நன்றி தெரிவித்தும், 2019ம் ஆண்டை வரவேற்றும் நள்ளிரவு 12 மணிக்கு நடந்த சிறப்பு திருப்பலியில் பங்கெடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதனிடையே முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு முழுவதும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
Discussion about this post