தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்திற்கு புதிய இணையதளம்

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் பொதுமக்கள் ஆன்-லைன் முறையில் கோரிக்கை மனுக்களை பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக தலைமை அலுவலகம் அல்லது மண்டல அலுவலகங்களில் அளித்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருட்செலவு மற்றும் நேர விரையத்தை தவிர்க்கும் வகையில் www.tnscb.org என்ற புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இணைய தளத்தின் மூலம் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் தங்களின் கோரிக்கைகளை பதிவு செய்து அதற்கான ஒப்புகைச்சீட்டு பெற்றுக்கொள்ள முடியும். மேலும் தங்களின் மனுவின் நிலை குறித்த தகவல்களையும் இணையத்தின் மூலம் பொதுமக்கள் அறிந்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version