வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கான புதிய வாகனங்களை, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், 2 வருவாய் கோட்டங்கள் மற்றும் 6 வருவாய் வட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்நிலையில், 1 கோடியே 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், வருவாய் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 8 புதிய வாகனங்களும், மருத்துவ கல்லூரி பயன்பாட்டிற்காக 2 ஆம்புலன்ஸ் வாகனங்களும் வாங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களின் பயன்பாட்டினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு, மாவட்ட ஆட்சியர் கிரான் குரலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version