புதிய விதிமுறைகளின்படி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

பிசிசிஐயின் புதிய விதிமுறைகளின்படி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிசிசிஐயின் புதிய விதிமுறைகளை ஏற்காமல் இருந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்தலை நடத்த பிசிசிஐ தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இதை எதிர்த்து பிசிசிஐ நிர்வகிக்கும் குழு முன் வைத்த வாதத்தில், பிசிசிஐயின் புதிய விதிமுறைகளுக்கு உட்படாமல் தேர்தல் நடத்தினால், அது முறைகேட்டிற்கு வழி வகுக்கும் என கூறப்பட்டது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பிசிசிஐயின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், தேர்தல் முடிவுகள் உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

Exit mobile version