புதிய வழித்தடத்திற்கான பேருந்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை அருகே புதிய வழித்தடத்தில் அரசு பேருந்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

ஆரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டேரி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தினர் அன்றாட தேவைக்காக 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று வர வேண்டிய நிலை இருந்தது. இதனை போக்க பேருந்து வசதி செய்து தருமாறு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் மனுவை ஏற்றுக்கொண்ட அமைச்சர், தமிழக அரசின் உதவியுடன் காட்டேரி – ஆரணி புதிய வழித்தடத்தில் நகர பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி, அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version