குற்றாலம் ஐந்தருவியில் வாகன ஓட்டிகளின் கோரிக்கை ஏற்று சாலை அமைக்கப்பட்டதால் தமிழக அரசிற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள இலஞ்சியிலிருந்து ஐந்தருவிக்கு செல்ல வாகன ஓட்டிகளுக்கு ஏதுவாக சாலை அமைக்க தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்திருந்தனர். தற்போது சீசன் துவங்க உள்ள நிலையில், ஐந்தருவியில் இருந்து இலஞ்சி செல்லும் சாலை 63 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு உள்ளது. உடனடி நடவடிக்கை எடுத்த அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.