குற்றால ஐந்தருவியில் இன்று காலை முதல் மக்கள் குளிக்க அனுமதி

குற்றால ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து இன்று காலை முதல் மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி குற்றாலம் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை காரணமாக குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி, நேற்று மாலை முதல் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க காவல்துறையினர் தடை விதித்தனர் . மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடை நீடிக்கிறது. இந்தநிலையில், ஐந்தருவியில் இன்று காலை வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

Exit mobile version