குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

குற்றால அருவிகளில் நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால், அருவிகளில் தண்ணீர் சற்றுக் குறைந்தும், அதிகரித்தும் காணப்பட்டது. இந்த நிலையில், நேற்றிரவு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவியில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

Exit mobile version