அரசியல் கட்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு

மக்களவை தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, கூட்டணி அமைப்பது, பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செய்து வருகின்றன. தேர்தலையொட்டி, பணப் பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகள் குறித்து மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு, தேர்தலையொட்டி, தமிழகத்தில் நடத்தப்படும் தேர்தல் பொதுக்கூட்டங்களில் பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் பிளாஸ்டிக் பேனர்கள் வைக்க தடைவித்து உத்தரவிட்டது. பொதுக்கூட்டத்திற்கு லாரி மற்றும் பேருந்துகளில் அதிகளவில் மக்களை மொத்தமாக அழைத்து செல்லக்கூடாது என்று உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒருவாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Exit mobile version