மிடூவால் பெண்களுக்கு புதிய நம்பிக்கை – தமிழிசை

சபரிமலை குறித்த நடிகர் ரஜினிகாந்தின் கருத்து வரவேற்கத்தக்கது என்று பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, சபரிமலையில் ஐதீகங்கள் பின்பற்ற வேண்டும் என்று ரஜினி கூறிய கருத்தினை வரவேற்பதாக குறிப்பிட்டார். இனி வரும் எந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.

மேலும் காங்கிரஸ் கட்சியோடு எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் மூழ்கித்தான் போகும் எனவும் தமிழிசை குறிப்பிட்டார். மிடூ, பெண்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்துள்ளதாகவும், திரை உலகில் பெண்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட குழுவை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என்று மக்கள் விரும்புவதாகவும் தமிழிசை குறிப்பிட்டார்.

Exit mobile version