ரூ.19 கோடி மதிப்பில் புதிய நீதிமன்ற கட்டிடங்கள் திறப்பு

சுமார் ரூ.19 கோடி மதிப்பில் புதிய நீதிமன்ற கட்டிடங்களை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரியில் சுமார் 19 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள், நீதியரசர்கள் குடியிருப்பு, குடும்ப நீதிமன்றம், கூடுதல் மகளிர் நீதிமன்றம் மற்றும் ஓசூரில் கூடுதல் துணைநீதிமன்றம், தேன்கனிக்கோட்டையில் கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மற்றும் உயர் நீதிமன்ற, மாவட்ட நீதிபதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version