டெல்லிக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அவரை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்வுடனான இரண்டு நாள் சந்திப்புக்கு பிறகு திருவிடந்தையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு இருந்து டெல்லி புறப்பட்ட அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் அன்போடு வழியனுப்பி வைத்தனர். இருநாட்டு தலைவர்களின் வருகைக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்த தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். 

Exit mobile version