ரூ.38 கோடி மதிப்பில் புதிய நீதிமன்ற கட்டடங்கள்

38 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீதிமன்ற வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டினர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், சங்கராபுரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் 38 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீதிமன்ற வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.இவ்விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் , கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version