பட்டுக்கோட்டையில் தமிழக அரசின் புதிய பேருந்து சேவைகள் துவக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழக அரசின் நான்கு புதிய பேருந்துகளின் சேவை துவங்கப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர் சேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தற்போது 133 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்துகளை தமிழக அரசு மக்களுக்கு வழங்கியது.

இந்த நிலையில் பட்டுகோட்டை பகுதியில் மக்களின் கோரிக்கையை ஏற்று திருப்பூர், ஏர்வாடி ஆகிய பகுதிகளுக்கு புதிய பேருந்துகள் சேவை துவங்கப்பட்டது. இதில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Exit mobile version