விழுப்புரம் மாவட்டத்திற்கு 4 வழித்தடங்களில் புதிய பேருந்துகளின் சேவை

தமிழக அரசின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 4 புதிய பேருந்துகளின் சேவையை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழுப்புரத்திலிருந்து சென்னை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை ஆகிய நான்கு வழித்தடங்களில் புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் துவக்கி வைத்தார். பின்னர் விழுப்புரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கணினிமயமாக்கப்பட்ட மின்தடை பதிவு மையத்தினையும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

Exit mobile version