அந்தியூர் அருகே ரூ.1.60 கோடி செலவில் பள்ளிக்கு புதிய கட்டடம் திறப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள காந்தி நகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். ஆபத்தான கட்டடத்தில் இயங்கி வந்த பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு 1 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியது. இதையடுத்து புதிய கட்டட பணிகள் நிறைவடைந்த நிலையில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா திறந்து வைத்தார், புதிய கட்டடம் கட்டி தந்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version