சிவகங்கை ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி ஊராட்சியில் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் திட்ட பணிகளை கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடி கிராமத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய திட்டப்பணி துவக்க விழா நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன்  அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் பேருந்து நிழல் குடை கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்ததுடன் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர விளக்கு அமைப்பதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்  மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட திட்ட அலுவலர் வடிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version