இந்திய பகுதிகளை சொந்தம் கொண்டாடும் நேபாளம்!!

இந்தியா மற்றும் நேபாளம் இடையே எல்லை பிரச்னை இருந்து வரும் நிலையில், இந்திய பகுதிகளான லிபுலேக், கலாபனி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் இப்பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து நேபாளம் புதிய வரைபடத்தை தயாரித்துள்ளது. லிபுலேக் உள்ளிட்ட 3 பகுதிகளும், தங்கள் நாட்டுக்குரியது என்றும் நேபாளம் அரசு கூறிவருகிறது. இந்நிலையில் தங்கள் நாட்டின் அதிகாரப்பூர்வ புதிய வரைபடத்தை நேபாள அரசு இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து எல்லை கட்டுமானப் பணிகளையும் நேபாள அரசு தொடங்கியுள்ளதால் சர்ச்சை கிளப்பியுள்ளது.

Exit mobile version