நெல்லை – தென்காசி இடையே மின்னல் வேக ரயில் சோதனை ஓட்டம்..70 கிமீ இருந்து 110 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு!

நெல்லை – தென்காசி இடையே 121 கிமீ வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. நெல்லை – தென்காசி இடையே 64கி.மீ. நீளம் கொண்ட வழித்தடத்தில் மணிக்கு 70 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இருப்புப் பாதைகள் பலப்படுத்தப்பட்டு 100 கிமீ வேகத்துக்கு ரயில்கள் இயங்கும் அளவுக்கு பணிகள் நடந்து முடிந்து உள்ளன. இதில், நெல்லை ரயில் நிலையத்திலிருந்து தென்காசி வரை 120 கிமீ வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நெல்லை-திருச்செந்தூர் மார்க்கத்தில் 70 கிமீ இருந்து 110 கிமீட்டராக வேகம் அதிகரிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Exit mobile version