இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! தென்காசி லாக்கப் டெத்! லாக்கப் மரணங்களை தடுப்பாரா ஸ்டாலின்?

தென்காசி அருகே காவல்துறையால் கைது செய்யப்பட்டவர் காவல்நிலையத்திலேயே மரணமடைந்தது குறித்தும், நெஞ்சை உலுக்கும் லாக்-அப் மரணங்களை ஸ்டாலின் தடுப்பாரா என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்…

மக்களுக்கு பிரச்சனை என்றால் நடவடிக்கை வேண்டி செல்வது காவல் நிலையங்கள்… ஆனால் காவல் நிலையமே பிரச்சனை என்றால் எங்கு செல்வது? ஆம், கொலை கொள்ளைகளுக்கு நடவடிக்கை எடுங்கள் என்று செல்லும் இடத்திலேயே கொலை நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? இதெல்லாம் நம் பக்கத்து மாநிலத்திலயோ, அல்லது அண்டை நாட்டிலேயோ நடக்கவில்லை… நம் ஊரில்தான்… ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறை என்ற சிறப்பு பெற்ற தமிழக காவல்துறையில்தான், லாக்கப் மரணங்கள் எளிதாக நடக்கின்றன..

தற்போது, நெல்லை பாளையங்கோட்டையில் மதுபானம் விற்றதாக கைது செய்யப்பட்டு, லாக்கப்பில் அடைத்துவைத்து தென்காசியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை சித்ரவைதை செய்துள்ளனர் காவல்துறையினர். கைது செய்து இரண்டு நாள் கழித்து மரணமடைந்த கந்தசாமியின் உடற்கூறாய்வில் அவர் சித்ரவதை செய்யப்பட்டிருப்பது அம்பலம் ஆகியிருக்கிறது. ஆனால், எங்கே நாம் மாட்டிக்கொண்டுவிடுவோமோ என்று எண்ணி கந்தசாமியின் மரணத்தை மறைத்திருக்கிறது காவல்துறை

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து சென்னை விக்னேஷ், தஞ்சாவூர் சத்யவாணன், ராமநாதபுரம் மணிகண்டன், சேலம் பிரபாகரன், திருவண்ணாமலை தங்கமணி, கொடுங்கையூர் ராஜசேகர், கன்னியாகுமரி அஜித்,  இப்போது தென்காசி கந்தாசாமி என்று லாக் மரணபட்டியலே வெளியிடலாம்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, ”காவல்துறை என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். காவலர்கள் தவறு செய்தால் முறையான நடவடிக்கை எடுப்பேன்” என்று ஸ்டாலின் உரக்க கூச்சலிட்டார். ஆனால் அக்கூச்சல் வெற்றுக் கூச்சல்தான் என்று அப்போது புரியவில்லை..இப்போது புரிகிறது.

காலனிய ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட காவல்துறையானது “obey the order” என்கிற கீழ்படிதலின் விதிக்கு கீழ் தங்கள் அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து வருவது  காலம்காலமாக நிகழ்ந்துவரும் ஒரு சம்பிரதாய சடங்காகிவிட்டது. அதிலும் விளிம்புநிலை மக்களை நோக்கியே தங்கள் அதிகார வெறியாட்டத்தை கட்டவிழ்க்கும் காவல்துறையை கேட்கக்கூட ஆளில்லை என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் ஆதங்கமே…கூலித் தொழிலாளிகள், விவசாயிகள், பாமர ஏழைகள் என்று அடித்தட்டு மக்களை குறிவைக்கிறது காவல்துறையின் பூட்ஸ்கள்.

”ஜெய்பீம் திரைப்படம் பார்த்து மிகவும் கலக்கம் அடைந்தேன். எனக்கு உறக்கமே வரவில்லை” என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின், தினந்தோறும் யாரோ ஒருவர் லாக்கப்பில் மரணம் அடைவது குறித்து கவலை கொண்டிருக்கிறாரா?

தங்கச்சாமி உண்மையிலேயே தவறு செய்து இருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விடுத்து காவலர்களே சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு என்றும், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் கனவோடு ஊர்சுற்றிக் கொண்டிருக்கிறார் …

திரைப்படத்திற்காக தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், நிஜ சம்பவங்களுக்காக என்றைக்கு குரல் கொடுக்கப் போகிறார்?

தன் கையில் காவல்துறையை வைத்துக்கொண்டு ஏவல்துறையாக மட்டுமே அதனை பயன்படுத்தும் ஸ்டாலின் தவறு இழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வியே மக்களிடம் எழுந்துள்ளது.

Exit mobile version