பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணன் கைது

பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசிய புகாரில், நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நெல்லையில் எஸ்டிபிஐ கட்சி நடத்தி மாநாட்டில் கலந்து கொண்ட நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசினார். நெல்லை கண்ணன் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூரில் தனியார் விடுதியில் தங்கி இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version