"பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அடித்துக் கொலை"

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை உறவினர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையநல்லூரை அடுத்துள்ள மேலக்கடையநல்லூரைச் சேர்ந்த கோபால் என்பவர் தனது வீட்டின் அருகே வசித்து வரும் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பெண்ணின் தாயார் புளியங்குடி சிந்தாமணியில் வசித்து வரும் தனது தம்பி மாரி பாண்டி மற்றும் உறவினர் வேலு தாய் ஆகியோரை வரவழைத்து நடந்ததை தெரிவித்துள்ளார். இந்நிலையில், பெருமாளுக்கும் பெண்ணின் உறவினருக்கும் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த மாரி பாண்டி மற்றும் வேலுத்தாய் ஆகியோர் கோபாலை சரமாரியாக தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரி பாண்டி, வேலுத்தாய் ஆகிய இருவரையும் கைது செய்தனர் .

 

Exit mobile version