இளைஞருடன், இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட தவறான நட்பு ; இருகுடும்பத்தினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரல்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே தண்ணீர் கேன் போட வந்த இளைஞருடன், இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட தவறான நட்பு இரு குடும்பத்தினரை நடு ரோட்டில் மல்லுகட்ட வைத்துள்ளது.

நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த அவரைகுளத்தைச் சேர்ந்தவர் சதீஷ்.

வெளிநாட்டில் வேலை பார்ந்து வந்த இவரின் மனைவி, செல்லக்கனிக்கும் தண்ணீர் கேன் போட வரும் இளைஞர் ஜெகனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் வீடியோகால் பேசி நட்பை வளர்த்து வந்துள்ளனர். அப்படி வீடியோ மூலம் பேசுவதை தனது செல்போனில் ரெகார்டு செய்து வைத்துள்ளார் ஜெகன்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து திரும்பிய சதீசுக்கு இவர்களின் கள்ள நட்பு தெரியவந்துள்ளது.

இது குறித்து மனைவியிடம் சண்டை போட்ட சதீஷ், கள்ள நட்பு குறித்து மாமனாரிடமும் முறையிட்டுள்ளார்.

இதனால் கொந்தளித்த செல்லக்கனியின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் ஆயுதங்களுடன் ஜெகன் வீட்டிற்கு சென்று, ஜெகனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனால் செல்லக்கனியின் குடும்பத்தாருக்கும், ஜெகனின் குடும்பத்தாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு நடு ரோட்டில் ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இரு தரப்பினரும் ஆயுதங்களை கொண்டு மாறி மாறி தாக்கிக் கொண்டதில், நான்கு பேர் படுகாயங்களுடன் பணகுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருகுடும்பத்தினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வரும் நிலையில் பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version