நெல்லையில் பச்சை மிளகாய் விற்பனை அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் அரியநாயகி புரத்தில் பச்சை மிளகாய் பயிரிட்டுள்ள விவசாயிகள், அமோக விளைச்சல் மற்றும் நல்ல விலை கிடைப்பதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் அரிய நாயகிபுரத்தில் ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, நல்ல விளைச்சல் கிடைத்திருப்பதாக கூறுகின்றனர். மேலும் கிணற்று நீர் பாசனத்தில்தான் இந்த பச்சை மிளகாய் பயிரிடப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமும் பச்சை மிளகாய் பறித்துச் செல்லும் விவசாயிகள், அதனை நேரடியாகவே சந்தைகளில் சென்று விற்பனை செய்கின்றனர். ஒரு கிலோ பச்சை மிளகாய் 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

 

Exit mobile version