நெல்லை மாவட்டம், குற்றால அருவிக்கு நீர்வரத்து குறைந்தது

குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பிரதான அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியது. எனவே, சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது மழை பொழிவு குறைந்துள்ளதால் அருவிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் மகிழ்ச்சியாக குளித்து செல்கின்றனர்.

Exit mobile version