நெல் ஜெயராமனுக்கு ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் அஞ்சலி

உடல்நலக் குறைவால் காலமான நெல் ஜெயராமனின் உடலுக்கு, விவசாயிகள், கிராம மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

174 பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்து மரபு மாற்று பயிர்களுக்கு எதிராக போராடிய நெல் ஜெயராமன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.

நெல் ஜெயராமனின் உடல் அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, இன்று பிற்பகல் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

 

Exit mobile version