12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் நெல் ஜெயராமன் கருத்துக்கள் இடம் பிடிப்பு

பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் நெல் ஜெயராமன் தொடர்பான கருத்துகள் இடம்பெற வைத்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெல் ஜெயராமன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். பாரம்பரிய விதைகளை பாதுகாத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தவர் நெல் ஜெயராமன். கடந்தாண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு தாவரவியல் பாடப்பிரிவில் நெல் ஜெயராமன் தொடர்பான கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் நெல் ஜெயராமன் உறவினர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version