காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

காஷ்மீரைச் சேர்ந்த  மாணவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கோரிய மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் 10 மாநில அரசுகள் விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஒரு சில மாநிலங்களில் காஷ்மீரைச் சேர்ந்த  மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய , மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் 10 மாநிலங்களின் அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Exit mobile version