கும்மிடிப்பூண்டி அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் சோதனைச்சாவடியில், எரிசாராயம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலையடுத்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது ஹரியானா மாநிலத்திலிருந்து, புதுச்சேரிக்கு லாரியில் எரிசாராயம் கடத்தி வந்த இருவர் பிடிபட்டனர். லாரியை சோதனை செய்ததில் 500 கேன்களில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17,500 லிட்டர் எரிசாராயம் இருப்பது தெரிய வந்தது.

Exit mobile version