விழுப்புரம் அருகே, குடிபோதையில் இளைஞர் வெட்டிக் கொலை

விழுப்புரம் அருகே குடிபோதையில் இளைஞரை வெட்டிக் கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் மாலை நேரத்தில் குடிபோதையில் அந்த பகுதிகளில் தொடர்ந்து ரகளையில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இதனை அவரது பக்கத்து வீட்டுக்காரான தணிகைராஜ் என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இருப்பினும் தனது ரகளையை கைவிடாது தொடர்ந்து அய்யப்பன் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதே போல் விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் வாகனங்களை மறித்து ரகளை ஈடுபடும்போது. அவரை தணிகைராஜ் தடுக்க முயன்றுள்ளார். உடனடியாக தணிக்கைராஜ் தான் கையில் வைத்திருந்த அரிவாளால் அய்யப்பனை தாக்க முயலும்போது.

ஆத்திரமடைந்த அய்யப்பன் சற்றும் எதிர்பாராமல் தணிகைராஜை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த தணிகைராஜை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துமணைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் செல்லும் வழியில் தணிகைராஜ் பரிதாபமாக உயிரழ்ந்தார். தொடர்ந்து ரகளையில் ஈடுப்பட்ட அய்யனாரை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து வளவனூர் காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்ம்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version