புதுச்சேரி அருகே மர்ம முறையில் மகள்களுடன் இறந்து கிடந்த கணவன் மனைவி

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில்லில் கணவன் மனைவி இருவர் தங்கள் இரு மகள்களுடன் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

புதுச்சேரியை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியைச் சேர்ந்தவர்
சுந்தரமூர்த்தி. தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வரும் சுந்தரமூர்த்தி கடந்த திங்கட்கிழமையன்று உறவினர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இந்நிலையில், நேற்று அவரை தொடர்பு கொண்ட உறவினர்கள், தொலைபேசி அணைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து நேரில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, சுந்தரமூர்த்தி தனது வீட்டில் குடும்பத்தினருடன் சடலமாகக் கிடந்துள்ளார். அழுகிய நிலையில் இருந்த அவர்களது உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆரோவில் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version