நெல்லை அருகே, சாமியாடிய போது மயக்கம் போட்டு இருவர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த இடிந்தகரையில், தசரா திருவிழாவில் சாமியாடிய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இடிந்தகரையைச் சேர்ந்த பெருமாள் என்பவர், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு நேர்த்திகடனாக மாலை போட்டு விரதம் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு நடைபெற்ற பூஜையில் சாமியாடிகொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் பழவூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும், சாமியாடிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். ஒரே நாளில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version