காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை சேதம்

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே, தந்தை பெரியார் சிலையினை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துக்ளக் இதழ் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக பல்வேறு இயக்கங்களும், கட்சிகளும் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அடுத்த களியப்பேட்டை கிராமத்தில் திராவிடர் கழகம் சார்பில் நிறுவப்பட்ட பெரியார் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். களியப்பேட்டையில்  ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மற்ற பலரிடம்  சாலப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது போன்று சர்ச்சைக்கு உள்ளாகும் தலைவர்களின் சிலைக்கு காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Exit mobile version