ஈரோடு அருகே, நிலக்கடலை சாகுபடி அமோகமாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மானாவாரி நிலக்கடலை சாகுபடி அமோகமாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மானாவாரியாக நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. இந்தாண்டு பருவமழை உரிய நேரத்தில் பெய்ததால், நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது. அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

 

Exit mobile version