சென்னை அருகே, கோவிலில் நகை, பணம் கொள்ளையடித்த 3 பேர் கைது

சென்னை அசோக்நகரில் கோவில் உண்டியலை உடைத்துப் பணத்தைக் கொள்ளை அடித்துக்கொண்டு தப்ப முயன்ற கொள்ளையர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அசோக்நகர் 35ஆவது பிரிவில் திருவீதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்துப் பணத்தைக் கொள்ளையடித்ததுடன், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒரு சவரன் தங்கத் தாலியைம் எடுத்துச் சென்றனர். கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்ற போது வடபழனி காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த விஜய், சந்தோஷ், ஆசிப் ஆகியோர் என்பது தெரியவந்தது. மூவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் புழல் சிறையில் அடைத்தனர். அரை மணி நேரத்தில் கொள்ளையர்களைக் கைது செய்த வடபழனி காவல் உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசம் மற்றும் ஆய்வாளர் கண்ணன் ஆகியோருக்குச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Exit mobile version