பெங்களூர் அருகே ‘இந்தியா கிராண்ட்மதர்’ அழகிப் போட்டி

பெங்களூர் அருகே உள்ள அத்திப்பள்ளியில் முதன்முதலில் புதுமையாகப் பாட்டிகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றுள்ளது.

பெங்களூர் அருகே அத்திப்பள்ளியில் உள்ள நட்சத்திர விடுதியில் மிசஸ் இந்தியா கிராண்ட்மதர் என்ற தலைப்பில் பாட்டிகளுக்கான அழகிப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சுமார் 19 போட்டியாளர்கள் கலந்துகொண்டு ஒய்யாரமான நடையுடன் அணிவகுத்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். பாட்டிகள் அணிவகுத்து வந்தபோது அவர்களின் குடும்பத்தினரும் பேரப்பிள்ளைகளும் கைதட்டி ஊக்கப்படுத்தினர்.

Exit mobile version