கடும் வீழ்ச்சியை சந்தித்த தேசிய பங்கு சந்தைகள்

இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன

கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்கு சந்தை 39 ஆயிரத்து 513 புள்ளிகளில் முடிவடைந்திருந்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. சுமார் 400 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவு ஏற்பட்டது. இதேபோல தேசிய பங்கு சந்தையான நிஃப்டியும் சரிவுடன் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை 11 ஆயிரத்து 811 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை 100 க்கும் மேற்பட்ட புள்ளிகள் சடசடவென சரிந்தன. ஹீரோ மோடோகார்ப், மாருதி சுசுகி, லார்சன் அண்ட் டூப்ரோ, மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவன பங்குகள் அதிகமான சரிவை சந்தித்தன.

Exit mobile version