கன்னியாகுமரியில் தேசிய அளவிலான கபடி போட்டி-25க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் தேசிய அளவிலான கபடி போட்டி தொடங்கியுள்ளது.

தமிழக பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டி குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில், புனித அந்தோணி விளையாட்டு கழகம் சார்பில் தேசிய அளவிலான கபடி போட்டிகள் கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. 4 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், பஞ்சாப் , ஹைதராபாத் , பெங்களூரு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.முதல்நாள் நடைபெற்ற போட்டிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். வெற்றி பெறும் அணிகளுக்கு 30ம் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Exit mobile version