கோவையில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை

கோவையில் உக்கடம், குனியமுத்தூர் உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

போத்தனூர் பகுதியைச் சேர்ந்த சதாம், சித்திக் அபுபக்கர், இதயதுல்லா உள்ளிட்ட 8 பேரின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. வீடுகளில் உள்ள கணினிகள் மற்றும் தொலைபேசிகள் ஆகியவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாக என்ற கோணத்தில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் 8 பேரையும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 8 பேர் பணிபுரியும் இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exit mobile version