ஆசிரியர்களுக்கான தேசிய விருது அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் ஒவ்வொரு வருடமும் அறிவித்து. அதற்கான சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து தேசிய விருதுகளும் வழங்கப்படும். அதன்படி சிறந்த ஆசிரியர்களாக 46 பேர் தேர்வு ஆகியுள்ளனர்.

தமிழகத்தை பொருத்தவரை இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த ஆசிரியர் மன்சூர் அலி, கரூரைச் சேர்ந்த செல்வ கண்ணன் ஆகியோர்க்கு நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குகிறார். வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஆசிரியர் தினம். அன்று டெல்லியில் இந்த விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Exit mobile version